Sunday, February 1, 2009

தபு ஷங்கர் கவிதைகள்

மௌனம்
அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான்
எனக்குத்
தந்தாய்.

கோலம்
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே சிறிது நேரம்
உட்கார்ந்திரு, போதும்!

 
பூ
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?
என்று!

வானம்
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை
நிமிர்த்தி வெட்கப்படேன்...
வெகுநாட்களாய் உன்
வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Just Rate It