Sunday, August 30, 2009

Natpu kalam - Aruvumathi Kavithigal

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது
----------------------------------------------------------------------

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு  
-----------------------------------------------------------------------

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
------------------------------------------------------------------------

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன
------------------------------------------------------------------------

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்
------------------------------------------------------------------------

தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று
------------------------------------------------------------------------

கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன
-------------------------------------------------------------------------

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று
-------------------------------------------------------------------------

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்
-------------------------------------------------------------------------

கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
--------------------------------------------------------------------------

என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்
---------------------------------------------------------------------------

உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்
---------------------------------------------------------------------

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை
------------------------------------------------------------------------

9 comments:

  1. soooooooooooo sweet..........i loved it bcoz ellarumea thavara matumae ninaipathaal thaan niraiya unmaiyana uravugal pirinthu vidugiraargal......santhiya...............

    ReplyDelete
  2. entha oru uravin pirivukkum athu matum karanamaaha irukaathu.... avarhalin situation um kaaranamaaaha irukum.. aan pen natpu enbathu namma life la laam suite aahaadhu. so naan en frnda pirinji vanthutan after her marriage..... by, noor.........

    ReplyDelete
  3. Pattampoochi
    pidi
    engiral kathali.
    pattampoochi
    pidikkum
    engiral thozhi...NAAN

    ReplyDelete
  4. பேருந்து நிறுத்தத்திற்குச்
    சற்றுத் தள்ளிநின்று
    பேசுகிறவர்கள்
    காதலர்கள்
    நிறுத்தத்திலேயே
    நின்று
    பேசுகிறவர்கள்
    நண்பர்கள்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Just Rate It